மலச்சிக்கல் பிரச்சனையா? ஒரு டீஸ்பூன் நெய் போதும்.. எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் மலச்சிக்கலால் அவதிப்பட்டு, எளிய வீட்டு வைத்தியத்தில் நம்பிக்கை கொண்டவராக இருந்தால், மலச்சிக்கலைக் குறைக்க இதோ ஆயுர்வேத ஹேக். இதற்கு, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர், ஒரு தேக்கரண்டி நெய் போதும். ஆம், இது மிகவும் எளிது.

 எப்படி வேலை செய்கிறது?

நெய் ஒரு சூப்பர்ஃபுட் ஆனால் அதன் பலன்களை அறுவடை செய்ய, அதை உட்கொள்ளும் சரியான வழியை ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும். நெய்யில் பியூட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இது மலச்சிக்கலை போக்க உதவும் என்று கூறப்படுகிறது.

நெய் சிறந்த இயற்கை மலமிளக்கி. அத்துடன் எடை இழப்பு, தூக்கம் உட்பட எலும்பு வலிமையை அதிகரிப்பது போன்ற பிற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

நெய் உடலுக்கு லூப்ரிகேஷன் வழங்குகிறது, இது குடல் பாதையை சுத்தம் செய்கிறது. கழிவுகளின் இயக்கத்தை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் மலச்சிக்கல் அபாயத்தை குறைக்கிறது.

ஒரு தேக்கரண்டி நெய்யுடன் 200 மில்லி வெதுவெதுப்பான நீரை எடுத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட சிறந்த பலன் கிடைக்கும். செரிமானப் பாதை, குடல் மற்றும் பெருங்குடல் கரடுமுரடாக, கடினமாக மற்றும் வறண்டதாக மாறும்போது மலச்சிக்கல் ஏற்படுகிறது.

நெய்யின் லுப்ரிகேட்டிங் பண்புகள் அமைப்பை மென்மையாக்க உதவுகின்றன மற்றும் உடலில் இருந்து கழிவுகளை சீராக வெளியேற்ற உதவுகிறது.