லூர்து (Lourdes)
லூர்து


லூர்து (Lourdes) என்பது பிரனீசு மலைத்தொடர்களின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறு நகரமாகும். இந்நகரம் ஹோத்-பிரெனே மாநிலத்தில், தெற்கு-பிரனீசு மாவட்டத்தில் பிரான்சின் தென் மேற்குப் பகுதியில் பிரான்சு தலைநகர் பாரீசில் இருந்து தெற்கே 850 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் நடுவே செங்குத்தானப் பகுதியில் கட்டப்பட்டுள்ள கற்கோட்டையானது இந்நகரின் சிறப்பாகும். இது 1858 ஆம் ஆண்டு லூர்து அன்னைத் திருத்தலம் அமைவதற்கு முன்னமே உருவாக்கப்பட்டதாகும். லூர்து நகரம் மலைகளால் சூழப்பட்ட குளிரான பச்சைப் பசேல் எனக் காட்சியளிக்கும் அழகிய நகரமாகும். மலையின் மறுபக்கம் ஸ்பெயின் நாடு அமைந்துள்ளது.


1858 ஆம் ஆண்டு பெர்னதெத் எனும் ஆடு மேய்க்கும் பெண்ணிற்கு மரியாள் காட்சி கொடுத்ததிற்கு பின்னர் இந்நகர் பிரான்சிலும், உலகம் முழுமைக்கும் பிரபலமானது. அவ்விடத்தில் லூர்து அன்னை திருத்தலம் கட்டப்பட்டுள்ளது. இத்திருத்தலம் இயற்கை சூழலும் அமைதியும் கொண்ட இடமாகும். நிம்மதியாக செபிக்க, தங்க அனைத்து வசதிகளும் கொண்ட அழகிய புனித பயணத் தலமாகும். மேலும், உலகின் முதன்மையான புனிதப் பயணம் மற்றும் கிறித்துவ மத சுற்றுலாத் தலமானது.


ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுமையிலிருந்தும் வருகைத் தரும் அறுபது இலட்சம் வருகையாளர்களின் மூலம், லூர்து நகர் பிரான்சு நாட்டின் சுற்றுலாத் தலங்களில் பாரீசிற்கு அடுத்து இரண்டாமிடத்திலும், அகில உலக கத்தோலிக்க புனித பயணத்தலங்களில் ரோமிற்கும், புனித பூமிக்கும் அடுத்ததாக மூன்றாமிடத்திலும்