21 தலைமுறை பாவங்களை தீர்க்கும் திருவெண்காடு கோவில் அற்புதங்கள்...
21 தலைமுறை பாவங்களை தீர்க்கும் திருவெண்காடு கோவில் அற்புதங்கள்
1. புதன் திசை ஒவ்வொருவர் வாழ்விலும் 17 ஆண்டுகள் நீடிக்கும். எனவேதான் திருவெண்காட்டில் உள்ள புதன் சன்னிதானத்தில் 17 தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கிறது.
புதன் திசை நடப்பவர்கள் 17 தடவை புதனை சுற்றி வந்து 17 தீபங்கள் ஏற்றி வைத்து வழிபடுவது மிகவும் நல்ல பலன்களை கிடைக்க செய்யும்.
2.பொதுவாக புதன் கிரகத்தை ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத அலி கிரகம் என்று சொல்வார்கள். ஆனால் திருவெண்காட்டில் புதன் பகவான் ஆண் கிரகமாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.
3.திருவெண்காடு புதனை வழிபட்டால் கல்வி, ராஜயோகம், குபேர சம்பத்து, திருமணம், செல்வம், செழிப்பு, கலைத் துறைகளில் மேன்மை உள்பட 8 வகையான அதிகாரங்கள் கைகூடும்.
4.திருவெண்காடு தலத்தில் புதனை வழிபட வருபவர்களில் சிலர் நேரிடையாக புதன் சன்னதிக்கே சென்று விடுகிறார்கள். இது தவறு. முதலில் சுவாமியையும், பிறகு அம்பாளையும் வழிபட்ட பிறகே இறுதியில் புதன் சன்னதிக்கு சென்று பரிகார பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்.
5.இத்தலத்தில் முறைப்படி பூஜைகள் செய்ய விரும்புபவர்கள் விநாயகர், மூலவர், அகோர மூர்த்தி, அம்பாள் மற்றும் புதன் ஆகிய 5 பேருக்கும் தவறாமல் தனித்தனியாக அர்ச்சனை செய்ய வேண்டும்.
6.திருவெண்காடு தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.திருவெண்காடு தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். காசியில் உள்ள விஷ்ணு பாதத்தை வழிபட்டால் 7 தலைமுறை பாவங்கள்தான் விலகும். ஆனால் திருவெண்காடு தலத்தில் யார் ஒருவர் ருத்ர பாதத்தைமுறைப்படி வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசியை விட 3 மடங்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
7.ஆலயங்களில் 28 வகையான ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆலயங்களிலும் ஒவ்வொரு வகையான ஆகம கடைப்பிடிக்கப்படும். ஆனால் திருவெண்காடு தலத்தில் 3 வகை ஆகமங்கள் கடைப் பிடிக்கப்படுகின்றன.
8.திருவெண்காட்டில் உள்ள 3 குளத்திலும் நீராடி பிள்ளைஇடுக்கி அம்மனை வழிபட்டால் நிச்சயம் குழந்தைபேறு கிடைக்கும்.
9.சுவாமி, அம்மன், புதன் மூவருக்கும் முறைப்படி பூஜை செய்தாலும் குழந்தை நிச்சயம் உண்டு.
10.திருவெண்காடு அகோரமூர்த்தியை குலதெய்வமாக ஏற்று வழிபடுபவர்கள் நாகை மாவட்டத்தில் கணிசமாக உள்ளனர்.
11.திருவெண்காடு தலத்தில் ஹோமம் செய்தால் பில்லிசூனியம், திருஷ்டிகள் விலகும்.கோர்ட்டு வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
12.அகோரமூர்த்தியை வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும். சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்டு மனகசப்பும், கருத்து வேறுபாடுகளும் விலகும்.
13.இத்தலத்து புராணப்படி மருத்துவன் எனும் அசுரனை எதிர்த்து போரிட சென்ற நந்தியை அந்த அசுரன் 9 இடங்களில் ஈட்டியால் குத்தியதாக வரலாறு உள்ளது. அந்த நந்தியை சிவபெருமானுக்கு எதிரே காணலாம். அந்த நந்தி உடம்பில் 9 இடங்களில் ஈட்டியால் குத்துப்பட்ட துளைகள் உள்ளன. நந்திக்கு அபிஷேகம் நடக்கும் அதை பார்க்க முடியும். இந்த நந்திக்குதான் பிரதோஷ வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.
14.திருவெண்காடு தலம் மொத்தம் 17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்குள்ள சன்னதிகளை பொறுமையாக பார்த்து வந்தால் ஆலய வழிபாட்டுக்கான ஆத்ம திருப்தியை பெறலாம்.
15. இத்தலத்தில் உள்ள காளியின் சிலை பயங்கரமான முக வடிவமைப்புடன் உள்ளது. ஆனால் இந்த காளி சாந்தமானவள். பக்தர்கள் கேட்கும் வரம்களை எல்லாம் தவறாது தருபவள்.
16. காளி சன்னதியின் முன்பு மிகப்பெரிய பலி பீடம் உள்ளது. இந்த பலிபீடம் மிக மிக சக்தி வாய்ந்தது. எனவே இந்த பலி பீடத்தை பக்தர்கள் தொடாமல் வணங்க வேண்டும்.
17. இத்தலத்தில் உள்ள அகோரமூர்த்தி சன்னதி மண்ட பத்தில் தல வரலாறு ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது.
18. நடராஜர் சன்னதி சிதம்பரம் தலத்தில் இருப்பது போன்றே வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது.
18. திருவெண்காடு தலத்தில் சுற்றுப்பிரகாரங்கள் நல்ல பெரியதாக உள்ளன. ஆங்காங்கே மரங்கள் இருப்பதால் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதி உள்ளது.
19.சுற்றுலா வருபவர்கள் மற்றும் புதன்கிழமைகளில் வருபவர்கள் ஆலய மண்டபத்தில் தங்குவதற்கு வசதி உள்ளது. பக்தர்களுக்காக புதன்கிழமை மட்டும் மதியம் கூடுதலாக சில மணிநேரம் பூஜை நீடிக்கும்.
புதனுக்குரிய 17வருடம் திசா காலத்தில் புதனின் அருளசியைப் பெற புதன் திசை நடப்பவர்கள் செய்ய வேண்டிய எளிய தாந்திரிக பரிகாரங்கள்.
1. ஒரு புதன் கிழமையன்று புதனுக்குரிய ஹோம வழிபாடு செய்து செந்நாயுருவி என்ற மூலிகையை எடுத்து போட்டு வழிபாடு செய்து வந்தால் அவர்களுக்கு வாழ்க்கையிலே அந்த புதன் தசையானது 17வருடம் நல்ல முறையில் இயங்கி அவர்கள் பெயர்,புகழ்,செல்வம் அனைத்தையும் பெற உதவும்
2.மேலும் புதன் திசை நடப்பவர்கள் புதனுடைய கிழமைகளிலே புதன் ஓரை நேரமான காலை 6 மணி முதல் 7 மணி வரை பச்சைப்பயிரை ஒரு தாம்பாளத்தட்டில் நிரப்பி அதன் மீது ஒரு ஐந்து முக விளக்கை ஏற்றி வணங்கி வர அவர்களுக்கு அற்புதங்கள் நடக்கும்.
3.மேலும் புதன் திசை நடப்பவர்கள் புதனன்று பச்சைப்பயிறு பாயாசத்தை செய்து பெருமாள் கோயிலில் சுதர்சன ஆழ்வாரை வேண்டி விநியோகம் செய்து வந்தால் அற்புதமான பலனைக் காணலாம்.
4.மேலும் புதன்கிழமை அன்று இரவு ஒரு பச்சைத் துணியிலே பச்சைப்பயிரை முடிந்து தலையணைக்கு கீழே வைத்து தூங்கிவர வேண்டும்.
5.ஒரு புதன் கிழமையன்று இதை தொடங்கி ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக அவர்கள் இதை செய்து முடித்து பிறகு அதை ஒரு பெரிய பொட்டலமாகக் கட்டி ஓடுகிற நீரிலே போட்டால் புதன் கிரகம் இவர்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்துவார்
6.மேலும் புதன் என்ற கிரஹத்துக்கு உரிய பச்சை துணியை வஸ்த்ர தானம் செய்து இவர்கள் வழிபட அருமையான ஒரு மாற்றம் இவர்கள் வாழ்க்கையிலே ஒரு பெரிய ஏற்றம் வருவதை இவர்கள் கண்கூடாக பார்க்க முடியும்.
7.மேலும் புதனின் அருளாசியைப் பெறுவதற்கு இவர்கள் துளசி செடியை வளர்த்து அதைப் பெருமாள் கோவிலுக்கு கொடுத்து வர அற்புதமான மாற்றங்கள் இவரது வாழ்க்கையில் வந்து கொண்டே இருக்கும் என்றால் அது அற்புதத்திலும் அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும்.
8.புதனை அதிபதியாக கொண்டவர்களுக்கு தாய் மாமன் உறவு விட்டு போகும்.எனவே தாய் மாமன்கள் உள்ளவர்கள் தாய்மாமனை வீட்டிற்கு அழைத்து அவருக்கு நல்ல முறையிலே உணவுகளைக் கொடுத்து உபசரித்து தாய்மாமனுக்கு பச்சை நிற வஸ்த்ர தானம் செய்து அவருக்கு வேண்டிய உதவியை செய்யும் பொழுது புதனால் ஏற்படுகின்ற தீமைகள் அனைத்தும் கட்டுக்குள் அடங்கி நல்ல முறையிலே இவர்களுடைய வாழ்க்கையிலே முன்னேற்றம் வரும்.
9.ஒரு தாம்பாளத்தட்டில் பச்சைப்பயிறு,ஒன்பது வெற்றிலை,ஒன்பது பாக்கு,ஒன்பது ஒரு ருபாய் நாணயங்களை வைத்து புதன்கிழமைகளிலே புதன் இருக்கிற திசை வடக்கு நோக்கி இவர்கள் வழிபட்டு வர நிச்சயமாக ஒரு அருமையான முன்னேற்றத்தை இவர்கள் பெறுவார்கள்.
10.இந்த 17 வருட புதன் தசை நடக்கும் பொழுது ஒவ்வொரு புதனன்றும் தன்வந்த்ரியையும் சுதர்சன ஆழ்வாரையும் பெருமாள் கோயில்களிலும் மாலை வேளையிலே நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர 17 வருட புதன் தசை நடக்கும் பொழுது இந்த அற்புதமான பலாபலன்கள் இவர்களுக்கு கிடைத்துவிடும்.