படை எடுத்த 1000 பாம்புகள்… பிரபல நடிகர் முதுகில் ஏறி தப்பிய ராதிகா... நடுங்கிப் போன அனுபவம்...
சமீப காலமாக ஒடிடி தளங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் கொரோனா லாக்டவுன் காலத்தில் பெரிய நடிகர்களின் படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்றது. மேலும் ஒடிடி தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களும் சினிமாவுக்கு இணையாக வரவேற்பை பெற்று வருவதால், ஒடிடி தளங்களுக்கு நாளுக்கு நாள் மவுசு அதிகரித்து வருகிறது.
இந்த ஒடிடி தளங்கள் சிறு பட்ஜெட் படங்கள் வெளியீட்டிற்கு பெரும் உதவியாக இருப்பதாகவும், வருங்கால சினிமா ஒடிடி தளங்களை நம்பிதான் இருக்கும் என்றும், பல இயக்குநர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஒடிடி தளஙகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களின் ஒருவரான அல்லு அரவிந்த் ஆஹா என்ற பெயரில் ஒடிடி தளத்தை தொடங்கியுள்ளார்.
முதலில் தெலுங்கில் தொடங்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த தளம் தற்போது தமிழில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பிரம்மாண்டாக நடைபெற்ற இந்த ஒடிடி தளத்தில் அறிமுக விழாவில் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் நடிகை ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் கலந்துகொண்டார். அப்போது பேசிய நடிகை ராதிகா பல்வேறு சுவாரஸ்யமாக நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டார்.
தெலுங்கில் இருந்து பிஸினஸ் பண்ண ஆஹா தமிழில் கொண்டு வந்துள்ளதாக பலர் சொல்கிறார்கள். ஆனால் நான் அப்படி சொல்ல மாட்டேன். தமிழர்களுக்காகவும், தமிழ் சினிமாவிற்காகவும் நீங்கள் பெரிய முயற்சி எடுத்துள்ளீர்கள் அந்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள். ஆஹா பல மொழிகளில் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்று கூறினார் அப்போது அல்லு அரவிந்த் தயாரிப்பில் நடித்தபோது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் குறித்து கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த ராதிகா, அல்லு அரவிந்த் சாருடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது. அவர் பல படங்கள் எடுத்துள்ளார். அதில் என்னையும் சிரஞ்சீவி சாரையும் வைத்து எடுத்த ஒரு படத்தில்,நான் பாம்புடன் நடிக்க வேண்டும். ஆனால் பாம்புஎன்றால் எனக்கு பயம். அதனால் அந்த காட்சியில் நடிக்க மறுத்தவிட்டேன். ஆனால் அல்லு அரவிந்த் சார் அதெல்லாம் ஒன்றும் இல்லை நீ வந்து நடி என்று சொல்லியதால் நான் சென்றேன். அப்போது சுமார் 1000 பாம்புகளை திறந்துவிட்டார்.
இதனால் அவரை கோபமாகி கண்டபடி திட்டிவிட்டேன். நான் திட்டிய வார்தைகளை வெளியில் சொல்ல முடியாது. ஆனால் அவர் ஒரு நிமிடம் வாயை மூடி நில் ஷாட் ஓகே ஆகிவிடும் என்று சொன்னார். ஆனால் நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். அப்போது என்னை சமாதானப்படுத்த சிரஞ்சீவி சாரை அனுப்பினார். அவர் என் அருகில் வந்ததும், நான் அவர் முதுகில் ஏறிக்கொண்டு என்னை எப்படியாவது வெளியில் கூட்டிக்கொண்டு செல்லுங்கள் என்று கத்த ஆரம்பித்தேன். இந்த சம்பவத்தை என்னால் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.