வறுமையைப் போக்கும் கணபதி பீஜ ஸ்லோகம்
வறுமையைப் போக்கும் கணபதி பீஜ ஸ்லோகம்


மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்களில் முக்கியமானது இந்த விநாயகர் பீஜ மந்திரம்.

* இந்த அற்புத மந்திரத்தை எந்த நாளிலும் துதித்து வழிபடலாம். இதனால் நம் வறுமை நீங்கி செல்வ பலம் அதிகரிக்கும்.*

ஆவ்ம் ஸுமுகாய நமஹ

மிகவும் சக்தி வாய்ந்த இந்த விநாயகர் பீஜ மந்திரத்தை வாரத்தின் எந்த நாளும் உச்சரிக்கலாம் என்றாலும், ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி தினத்தண்டு மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் வீட்டில் இருக்கும் பிள்ளையார் படத்திற்கு பூக்கள் சூடி, தீப, தூபம் காட்டி, லட்டு, கொழுக்கட்டை போன்ற இனிப்பு பதார்த்தங்களை நிவேதனம் செய்து, விநாயகருக்குரிய பீஜ மந்திரத்தை 108 அல்லது 1008 முறை உச்சரித்து வழிபட வேண்டும்.

இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் வாழ்வில் மன அமைதி கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி ஏற்படும். கணவன் மனைவிக்கிடையேயான ஒற்றுமை ஓங்கும். கண் திருஷ்டி நீங்கும். நோய்கள் அகலும். செல்வம் அதிகளவில் சேர துவங்கும்.