கடன் , திருமணத்தடை தீர நரசிம்மருக்கு தீப வழிபாடு...
கடன் , திருமணத்தடை தீர நரசிம்மருக்கு தீப வழிபாடு

திருமணத்தடை, கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் சிங்கிரி குடியில் உள்ள நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம்.

கடலூர் மாவட்டம் சிங்கிரி குடியில், 16 திருக்கரங்களுடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் நரசிம்மர் உக்கிரமாக அருள்பாலிக்கிறார்.

மனநிலை பாதிப்பு, கடன் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், எதிரிகளால் தொந்தரவு, கிரக தோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

ஒரே மூலஸ்தானத்தில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பதை காண்பது அரிது.

மற்ற நரசிம்மர் தலங்களை விட சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் தலம் இது.