நோய்,திருஷ்டி,தோஷம் என பலவற்றை நீக்கும் கருங்காலியின் பயன்கள்
🙏 🔱நோய்,திருஷ்டி,தோஷம் என பலவற்றை நீக்கும் கருங்காலியின் பயன்கள் 🔱🙏

      🙏🔱கருங்காலியை நாம் அணிவதால் நம் உடலில் என்னென்ன பலன்கள் உண்டாகும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

🔱ஆன்மீக பூஜை பொருட்களில் அரிதான, முக்கியமான ஒன்று தான் கருங்காலி. இந்த கருங்காலியை மாலையாக, காப்பாக, தாயத்து, கைச்செயின் வளையலாக, இப்படி பல விதங்களில் அணியலாம். இதன் பூ, பட்டை , வேர், மற்றும் பிசின் ஆகிய அனைத்தும் மருந்துவ குணம் நிறைந்து காணப்படுகிறது.

🔱கருங்காலியை நம் உடலில் அணிவதால் என்னென்ன பலன்கள் என்பதை இந்த பதிவில் காணலாம்.

🔱இந்த கருங்காலி மாலையை ஆண்கள், பெண்கள் என்ற பேதமின்றி அனைவரும் அணியலாம். இப்படி அணிவதால் உடம்பில் இருக்கும் கெட்ட சக்திகள் மற்றும் எதிர் மறை ஆற்றல்களை கட்டுப்படுத்தும்.

🔱இந்த கருங்காலியானது நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய் பகவானுக்குரியது. இவர் கொடுக்கும் அனைத்து பலன்களும் கருங்காலி அணிவதால் நமக்கு கிடைக்கும்.

🔱கருங்காலி மரம் மின் கதிர்வீச்சுகளைத் தன்னுள் சேமிக்கும் அதனால் தான் அனைத்து கோயில்களிலும் கும்பாபிஷேகத்திலும் கருங்காலி கட்டைகளை கோபுர கலசங்களில் உள்ளே போடுவார்கள். இதனால் கோயிலை சுற்றி வசிக்கும் மக்களை இடி மின்னல் போன்றவற்றால் எந்த பாதிப்பும் ஏற்பாடமல் இந்த கலசங்கள் கவசங்களாக மாறி காக்கும். இந்த மரத்தின் நிழலில் அமர்ந்தால் கூட நோய் அனைத்தும் நீங்கும் வல்லமை பெற்றது.

🔱இந்த கருங்காலியை நாம் அணிவதால் உடலின் இரத்த ஓட்டத்தை சுத்தப்படுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து பசியை தூண்டும் திறன் பெற்றது. பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்கிறது.

🔱 ஆண்,பெண் மலட்டுத் தன்மையை நீக்கி குழந்தை பாக்கியத்தை கொடுக்கும். பெண்கள் இதனை அணிந்து கொள்வதால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். ஆண்கள் இதனை அணிவதால் அவர்களின் ஆண்மை சக்தி அதிகரித்து உடலை உறுதியாக வைக்கிறது.

🔱உடலில் சோம்பல் நீங்கி சுறு சுறுப்பு ஏற்படும். கருங்காலியை அணிவதன் மூலம் கோபங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை உணர முடியும். மன பயத்தை நீக்கி தைரியத்தைக் கொடுக்கும்.

🔱திக்கி திக்கி பேசுபவர்கள் இதனை அணிந்து வந்தால் நல்ல பேச்சு திறமை வரும். தொழில் செய்பவர்கள் கருங்காலி கட்டையை தொழில் விருத்தி அடையும். நிலங்கள் வாங்க வழிவகை செய்யும். விஷ பூச்சிகள் நம்மை அண்டாமல் பாதுகாக்கும். வாகனங்களில் இதனை கட்டுவதால் விபத்துகள் ஏற்படுவதை தடுத்து, நமது பயணங்களை பாதுகாக்கும். தவிர நெருப்பின் பயம் போக்கி அதிலிருந்து நம்மை பாதுகாக்கும்.

🔱செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் இந்த மாலை அணிந்தால் தோஷம் நீங்கி திருமணம் விரைவில் நடைபெறும். சகோதர , சகோதரி பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

🔱குளிர்ச்சி தன்மை கொண்ட இது உடலுக்கும், பற்களுக்கும் வலிமையை தரும்.கருங்காலி கட்டையானது கசப்பும் துவர்ப்பும் கலந்த சுவையை கொண்டுள்ளது. தவிர எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டது.

🔱வைரம் பாய்ந்த கட்டை அதாவது மிகவும் பழமையான மற்றும் வயதான மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. அந்த வகையில் கருங்காலிக் கட்டையானது மிகப் பழமையான ஒன்றாகும்.கருங்காலி கட்டையை தண்ணீரில் ஊற வைத்தால் அதன் நிறம் மாறும்.அந்த நிறம் மாறிய தண்ணீரில் குளித்து வர உடலில் இருக்கும் எல்லா வலிகளும் நீங்கும்.

🔱100% ஒரிஜினல் கருங்காலி பொருட்கள் கிடைக்கும்.🔱

🔱 குலதெய்வம் அருள் கிடைக்கும்.
🔱நேர்மறை எண்ணங்கள்
🔱காரிய சித்தி
🔱தொழில் வளர்ச்சி
🔱கணவன் மனைவி ஒற்றுமை
🔱கடன் தீர்வு
🔱குழந்தை பாக்கியம்
🔱நவகிரக தோஷ நிவர்த்தி
🔱உடல் ஆரோக்கியம்
🔱மற்றும்  பல்வேறு மருத்துவ குணங்கள் பெற்றது.🔱