ஆந்திரா மீன் குழம்பு
தேவையான பொருள்கள்::

  • மீன் -  அரை கிலோ
  • எண்ணெய் -அரை கப்
  • கடுகு - 1 ஸ்பூன்
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • வெந்தயம் -  கால் ஸ்பூன்
  • பெருங்காயம்  - கால் ஸ்பூன்
  • கறிவேப்பிலை - தேவையான அளவு
  • தக்காளி - 1
  • மல்லி தூள் - 2  ஸ்பூன்
  • காஷ்மீரி மிளகாய் தூள் - 3  ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1  ஸ்பூன்
  • புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை::

  • மீனை நன்கு  கழவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  • ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம் போட்டு  தாளிக்கவும்.
  • அதனுடன் சிறிது பெருங்காயம் சேர்க்கவும். தக்காளியை மசித்து  அதனு்டன்  தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் அதனுடன் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  • பின்பு நறுக்கி வைத்துள்ள மீன் துண்டுகளை மசாலா கலவையுடன் சேர்த்து கலக்கவும்.
  • அதன் பின்னர் தேவையான அளவு புளி தண்ணீரை சேர்த்து  20  நிமிடம் கொதிக்க விடவும். வெந்த பின் சிறிது கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
  •  இந்த மீன்  குழம்பு  கொஞ்சம்  காரமாக இருக்கும். சுவை  சூப்பராக இருக்கும்.