தேவையான பொருள்கள்::
- புழுங்கலரிசி - ஒரு கப்
- பச்சரிசி - ஒரு கப்
- துவரம்பருப்பு - கால் கப்
- கடலைப்பருப்பு - கால் கப்
- உளுத்தம்பருப்பு - கால் கப்
- வெந்தயம் - ஒரு ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 10
- தக்காளி - 4
- உப்பு -தேவையான அளவு.
செய்முறை:
- தக்காளியை பொடியாக நறுக்குங்கள். அரிசி, பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைத்து, தக்காளி, மிளகாய், உப்பு சேர்த்து அரைத்தெடுங்கள்
- அரைத்த மாவை 2 மணி நேரம் புளிக்கவிட்டு, தோசைகளாக ஊற்றி, எண்ணெய் சேர்த்து வேகவையுங்கள்.சாப்பிட மிகவும் சூப்பராக இருக்கும்.