தேவைாயன பொருள்ள்கள்::
- பச்சை சுண்டைக்காய் - 1 கப்,
- புளி - எலுமிச்சைப்பழ அளவு,
- மல்லித்தூள் - 2 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
- தேங்காய் - அரை மூடி
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - 6 ஸ்பூன்
தாளிப்பதற்கு...
- கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை - தேவைக்கு.
செய்முறை::
- தேங்காயை நைசாக அரைத்து கொள்ளவும். புளியை கரைத்து வடிகட்டி வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு, சுண்டைக்காயை லேசாக நசுக்கிப் போட்டு நன்கு வதக்கவும்.
- வதங்கியதும் எடுத்து தனியே வைக்கவும்.
- அதே எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து வதக்கவும்.
- அதனுடன் மிளகாய் தூள், தனியா தூள், புளிதண்ணீர் , மஞ்சள் தூள் சிறிது, உப்பு, அரைத்த தேங்காய் சேர்த்துச் வதக்கிய சுண்டக்காயும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும் .
- எண்ணெய் நன்றாகப் பிரிந்து வரும்போது இறக்கவும். இதற்கு சிறிது எண்ணெய் அதிகம் தேவை. இந்தக் குழம்பு 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்