தேவையான பொருட்கள் :
- பொன்னாங்கண்ணி கீரை-1 கட்டு
- தக்காளி-4
- துவரம் பருப்பு-1 டம்ளர்
- சின்ன வெங்காயம்-10
- சாம்பார் தூள் - 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- சிறிதளவு
- பெருங்காயத்தூள் -சிறிதளவு
- உப்பு-தேவையான அளவு
- எண்ணெய் -தேவையான அளவு
தாளிக்க::
- கடுகு -அரை ஸ்பூன்
- சீரகம் - அரை ஸ்பூன்
- வெந்தயம் - கால் ஸ்பூன்
- கருவேப்பிலை ,மல்லி இலை சிறிதளவு
செய்முறை :
- பருப்பை பெருங்காயத்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைத்துக்கொள்ளவும்.
- பின்பு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய வெங்காயம் தக்காளியை போட்டு வதக்கி அதில் நறுக்கிய கீரையை சேர்த்து தேவையான அளவு தண்ணீரையும், சாம்பார் தூளையும் சேர்த்து வேக விடவும்.
- வெந்தவுடன் உப்பு போட்டு பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை ஒரு தனி கடாயில் போட்டு தாளித்து அதில் கொட்டி கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான பொன்னாங்கண்ணி சாம்பார் ரெடி