தேவையான பொருட்கள் :
- துவரம்பருப்பு – ஒரு கப்
- காய்ந்த மிளகாய் – 4
- மிளகு – 6
- இஞ்சி – ஒரு சிறு துண்டு
- உப்பு – தேவையான அளவு,
- கடுகு - அரை ஸ்பூன்
- பச்சைமிளகாய் 4,
- சீரகம் – 1 ஸ்பூன்
- மோர் – 2 கப்
- தனியா – 1 ஸ்பூன்
- தேங்காய் துருவல் – ஒரு கப்
- கொத்த மல்லி , கறி வேப்பிலை – சிறிதளவு .
- எண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
- சிறிதளவு 1 ஸ்பூன் துவரம் பருப்பு, பச்சைமிளகாய், சீரகம், தனியா, இஞ்சி, தேங்காய் துருவல் எல்லாவற்றையும் ஊற வைத்து அரைத்து கொள்ளவும்.
- அரைத்த மசாலா விழுது மற்றும் மோர் உப்பு சேர்த்துக் கலக்கவும்.
- மீதி துவரம்பருப்பை நன்றாக ஊற விடவும். இதனுடன் காய்ந்த மிளகாய், மிளகு, இஞ்சி, உப்பு சேர்த்து அரைத்து பிசையவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த பருப்புக் கலவையைப் போட்டு கெட்டியாகக் கிளறவும். இதனை சிறிய உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து வேக விடவும்.
- கடாயில், கலந்து வைத்த மோர் கலவையுடன் வெந்த உருண்டைகளையும் போட்டு, கொத்த மல்லி, கறி வேப்பிலை தூவி, ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
- சுவையான உருண்டை மோர்க்குழம்பு ரெடி