தேவையான பொருட்கள் :
- துவரம் பருப்பு -2 ஸ்பூன்
- கடலை பருப்பு -2 ஸ்பூன்
- சாம்பார் பொடி -2 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 3
- புளி - சிறிதளவு
- பூண்டு - 20 பல்
- இஞ்சி - 25 கிராம்
- வறுத்து பொடித்த வெந்தயம் - 1 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- மஞ்சள் பொடி - சிறிதளவு
- பெருங்காயம் - சிறிதளவு
- கறிவேப்பிலை – சிறிதளவு
- நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- புளி - சிறிதளவு
செய்முறை:
- முதலில் இஞ்சி இன் தோலியை நீக்கவும் . பூண்டு உரிக்கவும், வெங்காயம் நறுக்கவும்.
- மூன்றையும் மையாக அரைக்கவும்.
- கடாயில் நல்லெண்ணைய் விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
- அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணை
- பிரியும் வரை வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும். 1 டம்ளர் தண்ணீர் விடவும்.
- புளி கரைத்த தண்ணீர் சாம்பார் பொடி, பெருங்காய பொடி, வறுத்த வெந்தய பொடிஎல்லாம் சேர்க்கவும் .
- நன்கு கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு தயார்.