தேவையான பொருட்கள் :
- கருப்பு கொண்டைக் கடலை - 150 கிராம்.
- வெங்காயம் - 1.
- தக்காளி - 2.
- மிளகாய்த் தூள் - 3 ஸ்பூன்.
- புளி - தேவைக்கு.
- தேங்காய் துருவல் - 1 ஸ்பூன்.
- முந்திரி - 2.
- கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு.
- காய்ந்த மிளகாய் - 2.
- உப்பு, எண்ணெய், கொத்தமல்லி - தேவைக்கு.
செய்முறை:
- கருப்பு கொண்டைக் கடலையை 4 மணி நேரம் ஊறவைத்து பிறகு உப்பு சேர்த்து குக்கரில் வேகவிடவும். ப்ரஷ்ர்பேனில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய் தாளித்து, வெங்காயம், தக்காளி வதக்கவும்.
- பிறகு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி வெந்த கொண்டைக்கடலை சேர்த்து அரை டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்ததும் புளிக்கரைசலை விடவும்.
- 5 நிமிடம் கழித்து கொதித்ததும் தேங்காய்த் துருவல், முந்திரி அரைத்து விழுது சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிட்டு குழம்பு சற்று கெட்டியானதும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.