தேவையான பொருட்கள்:-
- புளி -பெரிய எலுமிச்சம்பழ அளவு
- பெருங்காயம் -1/2 ஸ்பூன்
- துவரம்பருப்பு - 1 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- மிளகாய் வற்றல் - 3
- வெந்தயம் : 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை -2 கொத்து
- நல்லெண்ணெய் - தேவையான அளவு
- சாம்பார் பொடி : 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- சுண்டைக்காய் வற்றல் - தேவையான அளவு.
செய்முறை:-
- முதலில் புளியை ஊற வைத்துக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி பெருங்காயத்தைப் பொறித்துக் கொள்ளவும். பின்னர் தேவையான அளவு சுண்டைக்காய் வற்றலை வறுத்து எண்ணெயில் போட்டு பொறித்தெடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
- பின்னர் கடுகை வெடிக்க விட்டு, துவரம்பருப்பு, வெந்தயம், மிளகாய்த் துண்டுகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு ஒவ்வொன்றாக நன்கு வறுக்க வேண்டும். லேசாகப் பொன் நிறம் வந்தவுடன் சாம்பார் பொடியைப் போட்டு மேலும் வறுக்கவும்.
- இப்பொழுது கரைத்த புளித் தண்ணீரை அதில் விடவும். வறுத்து வைத்துள்ள சுண்டைக்காய் வற்றலையும் அதனுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு போடவும். பெருங்காயத்தைச் சேர்த்து 6 கொதிக்க விடவும். கொதித்ததும் ஒரு ஸ்பூன் அரிசி மாவை நீரில் கரைத்து சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.