தேவையான பொருள்கள்::
வறுத்து அரைக்க
- தனியா - 3 ஸ்பூன்
- மிளகு, கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 2
- சீரகம் - 1 ஸ்பூன்
- பெருங்காயத்தூள் - சிறிதளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு
- தாளிக்க
- கடுகு - ஒரு டீஸ்பூன்
- வெந்தயம் - கால் ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி
- புளி - எலுமிச்சை அளவு
- கருவேப்பிலை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை::
- புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டி வைத்து கொள்ளுங்கள்.
- வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தனித்தனியாக வாசனை வரும்வரை வறுத்து ஆற வைத்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிச் சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து அதனுடன் அரைத்த விழுதைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
- புளியைக் கரைத்து ஊற்றி, தேவையான உப்பு போட்டு பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடுங்கள். குழப்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்தவுடன் இறக்கவும்.
- இந்த குழம்பு மழைக்காலத்திற்கு மிகவும் உகந்தது. தலைவலி சளி இருமலுக்கு ஏற்ற மருந்து குழம்பு