பூண்டு குழம்பு செய்யத் தேவையானப் பொருட்கள்
பூண்டு – 30 பல்
சின்ன வெங்காயம் – 20
தக்காளி – 1
மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
குழம்பு மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
புளி – நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
தாளிக்க
கடுகு – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1 /2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது

நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அதில் மல்லித்தூள், குழம்புதூள், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
பிறகு வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு சிறியதாக இருந்தால் நறுக்க வேண்டியதில்லை. தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இப்போது, கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து தாளிக்கவும். பின்னர் வெங்காயம், பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பிறகு, அடுப்பை மிதமான தீயிலேயே வைத்து குழம்பு திக்காக ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.
இப்போது சூப்பரான பூண்டு குழம்பு ரெடி தயாராக இருக்கும். அவற்றை சூடான சாதத்தோடு பரிமாறவும்.