தேவையான பொருள்கள்::
- நாட்டுக் கோழி கறி - ஒரு கிலோ
- சி.வெங்காயம் - கால் கிலோ
- தக்காளி - இரண்டு
- பட்டை, கிராம்பு, இலை, அன்னாசிப் பூ - தாளிக்க
- எண்ணை -தேவையான அளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- அரைக்க:
- சோம்பு - 1 ஸ்பூன்
- சீரகம் - ஒரு ஸ்பூன்
- மஞ்சள் பொடி - 1 ஸ்பூன்
- பூண்டு - 10 பல்
- இஞ்சி - சிறிய துண்டு
- காய்ந்த மிளகாய் - 15
- மல்லி - 3 ஸ்பூன்
- தேங்காய் துருவல் - 1 பத்தை
- கசகசா - ஒரு டீ ஸ்பூன்
செய்முறை::
- முதலில் கோழிக் கறியை சிறிய துண்டங்களாக நறுக்கி அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து பிசைந்து வைக்கவும்.
- சீரகம், சோம்பு, ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி, இஞ்சி, பூண்டு சேர்த்து தனியாக விழுதாக அரைக்கவும்.
- மிளகாய், மல்லியை தனியாக விழுதாக அரைக்கவும்,
- தேங்காய் துருவல், கசகசா தனியாக விழுதாக அரைக்கவும்.
- வெங்காயதம் தக்காளியை பொடியாக நறுக்கவும்.
- இப்போது கோழிக் கறியை நன்கு கழுவவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி தாளிக்க வைத்துள்ளவற்றைப் போட்டு வதக்கவும்.
- வாசனை வந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு சிவக்க வறுக்கவும்.
- பிறகு கோழிக்கறியை போட்டு ஐந்து நிமிடம் வதக்கி பின் தக்காளி சேர்க்கவும்.
- ஐந்து நிமிடம் வதக்கிய பின் நான்கு டம்ளர் தண்ணீர், மஞ்சள் ரூ சோம்பு விழுது, உப்பு சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிடவும்.
- பின் மிளகாய், மல்லி கலவை சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விடவும்.
- பின் தேங்காய் விழுது சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.