தேவையான பொருட்கள்:
- சிக்கன் - 1/2 கிலோ
- வெங்காயம் - 2 ( நறுக்கியது)
- தக்காளி - 2 ( நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 1
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- கொத்தமல்லி - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 5ஸ்பூன்
- வறுத்து அரைப்பதற்கு...
- வரமிளகாய் - 6
- மல்லி - 2 ஸ்பூன்
- மிளகு - 1 ஸ்பூன்
- சோம்பு - 1/2 ஸ்பூன்
- கசகசா - 1 ஸ்பூன்
- உடைத்த கடலை - 1 ஸ்பூன்
- பட்டை - 1 இன்ச்
- கிராம்பு - 3
- தேங்காய் - 1 பத்தை
- தாளிப்பதற்கு...
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- பிரியாணி இலை - 1
- சோம்பு - 1/2 டீஸ்பூன்
- வரமிளகாய் - 2
செய்முறை:
- முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
- பின்னர் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
- பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பின் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிவிட்டு, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
- பின்பு அதனுடன்தக்காளியை சேர்த்து நன்கு மசியும் வரை வதக்க வேண்டும். பிறகு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து, மஞ்சள் தூள் போட்டு , சிக்கனின் நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும்.
- அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு பிரட்டி, 2 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய் விழுது சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து பின்பு அடுப்பை 15 நிமிடம்அடுப்பை சிம்மில் வைத்தால்குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரிந்ததும் இறக்கி . கொத்த மல்லியைத் தூவி மூடி வைக்கவும்