தேவையான பொருள்கள் ::
- மைதாமாவு – 2 கப்
- சர்க்கரை – 2 கப்
- கேசரி கலர், குங்குமப்பூ – சிறிது
- நெய் – கால் கிலோ
செய்முறை:
- மைதாமாவை 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்து 4 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
- பிறகு அதில் கேசரி கலர், குங்குமப்பூ கலந்து ஜிலேபி ரிட்டில் ஊற்றிக் கொள்ளவும். ஜிலேபி தவாவில் கால் கிலோ நெய் ஊற்றி, சூடாக்கி ஜிலேபி பிழியவும். ஜிலேபி வெந்ததும் இறக்கி வைக்கவும்.
- பிறகு சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து இரண்டு, மூன்று கம்பிப்பதம் வந்ததும் ஜிலேபியை பாகில் தோய்த்து பரிமாறவும்.