தேங்காய் பால் பணியாரம்
தேவையான பொருள்கள்::

  • பச்சரிசி – அரை கப்
  • உளுந்து – அரை கப்
  • தேங்காய் – ஒன்று
  • பால் – ஒரு டம்ளர்
  • ஏலக்காய்
  • சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை::

  • உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்குஅரைக்கவும். (தண்ணீர் ரொம்ப சேர்க்காமல்)  தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும். அதனுடன் பால், ஏலக்காய் தூள், ருசிகேற்ப சீனி சேர்த்து வைக்கவும்.
  • அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போடவும்
  • நல்ல பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும்..
  • பரிமாறும் பொழுது தேவையான அளவு பணியாரத்தை எடுத்து, அதில் தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும்