தேவையான பொருள்கள்
- காலிஃப்ளவர் - 1
- மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
- மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
- அரிசி மாவு - 2 ஸ்பூன்
- கடலை மாவு - அரை கப்
- மைதா மாவு - அரை கப்
- இஞ்சி,பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- லெமன் ஜுஸ் - 2 ஸ்பூன்
- டொமேட்டோ சாஸ் - 1 ஸ்பூன்
- சோயா சாஸ் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
- காலிஃப்ளவர் பூக்களை உதிர்த்து கொதித்த தண்ணீரில் உப்பு சேர்த்து 10 நிமிடம் மூடி வைக்கவும்.
- பிறகு தண்ணீரை வடித்து விட்டு பூக்களை தனியே எடுத்து வைக்கவும்.
- மாவு வகைகள், மிளகாய்தூள் , மஞ்சள் தூள், இஞ்சி,பூண்டு விழுது ,டொமேட்டோ சாஸ் , சோயா சாஸ் , தேவையான அளவு உப்பு , தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி காலிஃப்ளவரை ஒவ்வொன்றாக எடுத்து கரைத்து வைத்த மாவில் ந்ன்கு முக்கி பொரிக்கவும். சுவையான சில்லி கோபி ரெடி