தேவையானவை:
- பச்சரிசி - 1 கப்
- உப்பு - தேவையான அளவு.
அரைக்க:
- புதினா - அரை கட்டு
- மல்லித்தழை - அரை கட்டு
- பச்சை மிளகாய் - 4
- இஞ்சி - ஒரு துண்டு,
- பூண்டு - 4 பல்
- மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
- தக்காளி 3
தாளிக்க:
- எண்ணெய் - 2 ஸ்பூன்நெய் - 2 ஸ்பூன்,
- பட்டை ஒரு துண்டு
செய்முறை:
- அரிசியை ஊற வைத்து உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள்.
- புதினா, மல்லித்தழையை சுத்தம் செய்து, அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.
- எண்ணெய், நெய்யைக் காயவைத்து, பட்டை தாளித்து, புதினா , மல்லி விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகக் கிளறுங்கள்.
- சிறிது உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறி, அதில் சாதத்தைப் போட்டு நன்கு கிளறிப் இறக்கவும்.
- சுவையான புதினா தக்காளி சாதம் ரெடி