தேவையான பொருள்கள்:
- எலுமிச்சை - 10
- இஞ்சி துண்டுகள் சிறிதளவு
- பச்சை மிளகாய் -3
- மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
- பெருங்காயம் பொடித்தது - 1டீஸ்பூன்
- வறுத்து அரைத்த வெந்தயப் பொடி -1 டீஸ்பூன்
- தேவையான உப்பு
- மிளகாய்ப் பொடி - 5 டீஸ்பூன்
- நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
- பழங்களைச் சிறு துண்டங்களாக நறுக்கி உப்பு
- சேர்த்து விதைகளை நீக்கிவிட்டு ஒரு பாட்டிலில் போடட்டு 2 நாட்கள் ஊற வைக்கவும்.
- இஞ்சி, பச்சைமிளகாயை சிறிது எண்ணெயில் வதக்கிச் சேர்க்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகை வெடிக்கவிட்டு இறக்கி, மஞ்சள், பெருங்காயப் பொடியைச் சேர்க்கவும்.
- எண்ணெய் ஆறியவுடன் மிளகாய்ப் பொடியையும் சேர்த்து எலுமிச்சைக் கலவையில் கொட்டிக் கலக்கவும். அடிக்கடி கிளறிவிட்டு காற்றுப் புகாமல் மூடி வைத்து ஒரு வாரம் கழித்து உபயோகிக்கவும்.