தேவையான பொருள்கள் :
- பூண்டு -1/4 கிலோ
- நல்லெண்ணெய் – 2 மே. க.
- உப்பு - தேவைக்கு
- எலுமிச்சம் பழம் – 1
அரைக்க :
- கடுகு – 1 தே. க.
- சீரகம் -1 தே. க.
- மல்லி விதை –1 தே. க.
- மிளகாய் பொடி – 5 தே. க.
- வெந்தயம் – 1 தே. க.
- பெருங்காயம் – 1 தே. க.
செய்முறை :
- பூண்டை உரித்து கொள்ளவும்.
- வாணலியில் அரைக்க கொடுத்துள்ளதை எண்ணெய் விடாமல் வறுத்து பொடித்து கொள்ளவும்.
- வாணலியில் நல்லெண்ணெய் விட்டு பூண்டை போட்டு வதக்கவும்.
- எண்ணெய் அதிகம் சூடாகாமல் மிதமான சூட்டில் வதக்கவும்.
- சற்று சிவந்து வந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியையும் உப்பையும் போட்டு கிண்டி, அடுப்பை உடனே அணைத்து விடவும்.
- பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாற்றை அதில் விடவும்.ஆறியவுடன் கண்ணாடி ஜாடியில் எடுத்து வைக்கவும்.