தேவையான பொருட்கள்::
- மட்டன்- அரை கிலோ
- மிளகாய் தூள் - 4 ஸ்பூன்
- மல்லி துாள் - 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- தேங்காய், பொடியாக நறுக்கியது – 1/4 கப்
- தக்காளி, பொடியாக நறுக்கியது – 1
- வெங்காயம், பொடியாக நறுக்கியது 2
- பொட்டு கடலை - 4 ஸ்பூன்
- பட்டை, லவங்கம் - சிறிதளவு
- கசகசா – 1 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை::
- கறியை நன்கு கழுவி சுத்தம் செய்து அதனுடன் 1 ஸ்பூன் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கிளரி 10 நிமிடம் மூடி வைக்கவும்
- பின்பு கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் மிக்ஸ் பண்ணிய கறியை பொட்டு நன்கு சிவக்கும் வரை அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் வறுத்து எடுத்து வைக்கவும்.
- பின்பு மீதி மிளகாய் தூள் , மல்லிதூள், தேங்காய் , பொட்டு கடலை, கசா கசா,, சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
- ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு பேஸ்ட்போட்டு வதக்கி அதனுடன் வறுத்த கறி அரைத்த தேங்காய் கலவை தேவையான அளவு உப்புமற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்
- குழம்பு கொதிக்கும் போது நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து சேர்த்து 10 நிம்டம் கொதிக்க வைக்கவும்.
- பின்பு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டுபட்டை, லவங்கம் கறிவேப்பிலை போட்டு தாளித்து குழம்பில் ஊற்றி இறக்கவும்.
- சுவையான வறுத்த கறி குழம்பு ரெடி