தேவையான பொருள்கள்::
- மட்டன் - அரைக் கிலோ
- பச்சைமிளகாய் விழுது - 1 ஸ்பூன்
- தனியா தூள் -2 ஸ்பூன்
- மிளகு தூள் - 1 ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- நறுக்கிய வெங்காயம் - 1 கப்
- உப்பு - தேவைக்கு
- பட்டை - ஒரு துண்டு
- சோம்பு - 1 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் -1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 2 கொத்து
- மல்லி இலை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை::
- மட்டனை நன்கு சுத்தமாக கழுவி அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகு தூள், தனியாதூள் சேர்த்து பிசைந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.
- குக்கரில் ஊறிய மட்டன் கலவையை போட்டு இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து பிசைந்து 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 6 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளி்த்து நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி அதில் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி மசாலா வாசனை போனவுடன்
- தாளித்தவற்றுடன் வேக வைத்த மட்டனை சேர்த்து பிரட்டி விட்டு நன்கு சிவக்க வந்ததும் எடுக்கவும். சுவையான மட்டன் சாப்ஸ் ரெடி.