தேவையான பொருட்கள்::
- அயிரை மீன் – கால் கிலோ
- சின்ன வெங்காயம் 150 கிராம்
- தக்காளி – 2
- பூண்டு- 10 பல்
- பச்சை மிளகாய் -3
- கருவேப்பிலை,கொத்தமல்லி இலை – சிறிதளவு
- நல்லெ எண்ணெய்- 4 ஸ்பூன்
- கடுகு,- தாளிக்க
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- மிளகாய்த்தூள்1 ஸ்பூன்
- மல்லி தூள்- 2 ஸ்பூன்
- உப்பு – தேவைக்கு.
- புளி- சிறிய எலுமிச்சை அளவு
- அரைத்த தேங்காய் - 5 ஸ்பூன்
செய்முறை::
- அயிரை மீனை கல் உப்பு போட்டு நன்றாக மூன்று நான்கு முறை தண்ணீர் விட்டு கழுவ வேண்டும்.
- அயிரை மீனில் மண் அதிகம் இருக்கும் அதனால் மண் போக நன்கு கழுவ வேண்டும்.
- பின்புஒரு கடா யில் எண்ணெய் விட்டு, கடுகு, , கருவேப்பிலை, பூண்டு, வெங்காயம் தாளித்து, வதங்கியவுடன், தக்காளி,சேர்க்க வேண்டும்.
- தக்காளி மசிந்தவுடன், மிளகாய்த்தூள், மசாலாத்தூள் சேர்க்க வேண்டும். புளித்தண்ணீர் விட வேண்டும்.
- அதனுடன் அரைத்த தேங்காய் தேவையான அளவு உ்புசேர்த்து நன்கு கொதிக்க வைத்து குழம்பு ஒரளவுக்குகெட்டியானவுடன் மீனை போட வேண்டும்,
- பின்பு 5 நிமிடம் கழித்து குழம்பை இறக்கி வைத்து அதில்சிறிதளவு கருவேப்பிலை,கொத்தமல்லி இலை போட்டு மூடி வைக்கவும். சுவையான அயிரை மீன் குழம்பு ரெடி