தேவையான பொருள்கள்::
- வஞ்சிரம் கருவாடு - 100 கிராம்
- பெரிய வெங்காயம் - 3
- தக்காளி - 3
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- தனியா தூள் - 1 ஸ்பூன்
- நல்லெண'ணெய் - 1 குழிக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
செய்முறை::
- கருவாடை சின்னதாக நறுக்கி நன்கு கழுவி எடுத்து வைக்கவும். தக்காளி வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கவும் அதனுடன் அனைத்து தூள் வகைகளையும் சேர்த்து வதக்கவும்.
- நன்கு வதங்கி மசாலா வாசனை போனவுடன் தக்காளி தேவையான உப்பு சேர்த்து வதக்கி அதனுடன் கழுவி வைத்துள்ள கருவாடு போட்டு வதக்கி 1 டம்ளர் தணணீர் சேர்த்து நன்கு வேகவைத்து கிரேவி கெட்டியானவுடன் இறக்கவும்