தேவையான பொருள்கள்:
- நெத்திலி மீன் - கால் கிலோ
- புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
- நல்லெண்ணெய் - 5 ஸ்பூன்
- கடுகு - சிறிதளவு
- பெரிய வெங்காயம் - 2
- இஞ்சி நறுக்கியது - 2 ஸ்பூன்
- பூண்டு நறுக்கியது - 2 ஸ்பூன்
- தக்காளி - 2
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- மிளகாய் தூள் - இரண்டு ஸ்பூன்
- தனியா தூள் - இரண்டு ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- மீனை சுத்தம் செய்து நன்கு கழுவி கொள்ள வேண்டும். புளியை நன்கு கரைத்து வைத்து கொள்ளவும்.
- வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்
- கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், போட்டு தாளித்து வெங்காயம், நறுக்கிய இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்
- வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி
- மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி பிறகு புளி தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து குழம்பு ஓரளவு கெட்டியானவுடன் மீனை போட்டு 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து கருவேப்பிலை போட்டு இறக்கவும். சுவையான நெத்திலி மீன் குழம்பு தயார்.