தேவையான பொருள்கள்::
- மீன் - அரை கிலோ
- எண்ணெய் -அரை கப்
- கடுகு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- வெந்தயம் - கால் ஸ்பூன்
- பெருங்காயம் - கால் ஸ்பூன்
- கறிவேப்பிலை - தேவையான அளவு
- தக்காளி - 1
- மல்லி தூள் - 2 ஸ்பூன்
- காஷ்மீரி மிளகாய் தூள் - 3 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
- புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை::
- மீனை நன்கு கழவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
- அதனுடன் சிறிது பெருங்காயம் சேர்க்கவும். தக்காளியை மசித்து அதனு்டன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் அதனுடன் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
- பின்பு நறுக்கி வைத்துள்ள மீன் துண்டுகளை மசாலா கலவையுடன் சேர்த்து கலக்கவும்.
- அதன் பின்னர் தேவையான அளவு புளி தண்ணீரை சேர்த்து 20 நிமிடம் கொதிக்க விடவும். வெந்த பின் சிறிது கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
- இந்த மீன் குழம்பு கொஞ்சம் காரமாக இருக்கும். சுவை சூப்பராக இருக்கும்.