தேவைாயன பொருள்கள்::
- இறால் - அரை கிலோ
- மிளகு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- கசகசா - 1 ஸ்பூன்
- நறுக்கிய வெங்காயம் - 1
- நறுக்கிய தக்காளி - 1
- அரைத்த பூண்டு - 5 பல்
- பச்சை மிளகாய் - 5
- மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
- துருவிய தேங்காய் - அரை கப்
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை::
- இறாலை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு,, உப்பு மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்து எடுத்து வைக்கவும்
- கடாயை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் மற்றும் கசகசா சேர்த்து, வறுக்கவும்.
- பிறகு ஆறியதும், அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நைஸாக அரைக்கவும்.
- பின்னர் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தேங்காயை போட்டு வறுக்கவும்.
- வறுத்த பொருட்கள் ஆறியதும், மிக்ஸியில் வறுத்த தேங்காய், பச்சை மிளகாய் போட்டு, நன்கு நைஸாக துவையல் அரைத்து கொள்ளவும்.
- கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும், பின் அதில் தக்காளி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும், அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு 10 நிமிடம் வதக்கவும்.
- பின் அதில் தேங்காய் சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, இறாலைப் போட்டு, அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான செட்டிநாடு இறால் குழம்பு ரெடி