தேவைாயன பொருள்கள்::
- மீன்- அரை கிலோ
- தேங்காய் - அரை மூடி
- மிளகு- 1 ஸ்பூன்
- சீரகம்-1ஸ்பூன்
- புளி-எலுமிச்சை பழ அளவு
- இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- மிளகாய்த்தூள்-2 ஸ்பூன்
- தனியாத்தூள்- 3 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
- நறுக்கிய வெங்காயம் - 2
- தக்காளி நறுக்கியது - 3
- பூண்டு - 10 பல்
- மல்லி இலை - சிறிதளவு
- நல்லெண்ணெய்-1குழிக்கரண்டி அளவு
- கடுகு- 1 ஸ்பூன்
- வெந்தயம்- 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய்-4
- உப்பு- தேவையான அளவு
- கறிவேப்பிலை-தேவையான அளவு
செய்முறை::
- மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- புளியை தண்ணீரில் கரைத்து வைத்து கொள்ளவும்.
- தேங்காய், மிளகு, சீரகம், சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிதளவு சீரகம், மிளகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் பூண்டு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது,சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- அதனுடன் பச்சை மிளகாய் , தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் புளித்தண்ணீர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது தேவைாயான அளவு தண்ணீர்சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- குழம்பு ஒரளவு கெட்டியானவுடன் மீன் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு மல்லி இலை கறிவேப்பிலை போட்டு இறக்கவும்
- சுவையான காரைக்குடி மீன்குழம்பு ரெடி.